/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வேப்ப மரத்தில் துாக்கிட்டு வாலிபர் தற்கொலை
/
வேப்ப மரத்தில் துாக்கிட்டு வாலிபர் தற்கொலை
ADDED : மே 02, 2025 01:34 AM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு அடுத்த நெம்மேலி ஏரிக்கரையில் உள்ள வேப்ப மரத்தில், துாக்கில் தொங்கிய நிலையில், 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் சடலம் கிடப்பதாக, செங்கல்பட்டு தாலுகா போலீசாருக்கு நேற்று காலை தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் அந்த உடலை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்கு பதிந்து நடத்திய விசாரணையில், இறந்த நபர் மேலேரிப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவரது மகன் சரவணன்,25, என தெரிந்தது.
'டிப்ளமா' படித்து விட்டு கடந்த ஒரு வருடமாக வேலைக்குச் செல்லாமல் இருந்துள்ளார். மேலும், போதைக்கு அடிமையான சரவணனை பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால், நேற்று முன்தினம் இரவு, வீட்டில் இருந்து சென்ற சரவணன், ஏரிக்கரையில் உள்ள வேப்ப மரத்தில், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.
செங்கல்பட்டு தாலுகா போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

