/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை
/
ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை
ADDED : மே 10, 2025 02:21 AM

மதுராந்தகம்:மதுராந்தகம் அடுத்த அரையபாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை, 45, என்பவரது மகன் கிரி, 19.
இவர், மதுராந்தகம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு, மதுராந்தகம் -- திருக்கழுக்குன்றம் மாநில நெடுஞ்சாலையில் உள்ள அரையப்பாக்கம் ரயில்வே கேட் பகுதியில், சென்னை எழும்பூரில் இருந்து துாத்துக்குடி செல்லும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து, தற்கொலை செய்து கொண்டார்.
தகவலின்படி சம்பவ இடத்திற்குச் சென்ற செங்கல்பட்டு ரயில்வே போலீசார், கிரியின் உடலை கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலைக்கான காரணம் குறித்து, மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.