ADDED : ஜன 23, 2025 07:48 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு:செங்கல்பட்டு ரயில்நிலையம் அருகில் தண்டவாளத்தில் ரயிலில் அடிபட்டு இறந்த நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு சென்ற ரயில்வே போலீசார் 18 வயது மதிக்கத்தக்க வடமாநில நபரின் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

