/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சுய வேலைவாய்ப்பு பயிற்சி பெற இளைஞர்களுக்கு அழைப்பு
/
சுய வேலைவாய்ப்பு பயிற்சி பெற இளைஞர்களுக்கு அழைப்பு
சுய வேலைவாய்ப்பு பயிற்சி பெற இளைஞர்களுக்கு அழைப்பு
சுய வேலைவாய்ப்பு பயிற்சி பெற இளைஞர்களுக்கு அழைப்பு
ADDED : நவ 23, 2025 01:44 AM
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில், கிராம இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெற, சமுதாய திறன் பயிற்சி பள்ளி மூலம் பயிற்சி வழங்கப்பட உள்ளன.
கலெக்டர் சினேகா வெளியிட்ட அறிக்கை:
தமிழக அரசு 2025 - 26ம் ஆண்டில், கிராமப்புற இளைஞர்களின் வேலைவாய்ப்பை கருத்தில் கொண்டு, பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பும், 42000 இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பு பயிற்சி வழங்கவு ம் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய திறன் பயிற்சி திட்டங்களின் மற்றொரு முயற்சியாக, சமுதாய திறன் பயிற்சி பள்ளி எனும், புதிய அணுகு முறையுடன் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
கிராமப்புற மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் குழு உறுப்பினர்களின் குடும்பத்தை சேர்ந்த 18 வயது முதல் 45 வயது வரையிலான ஆண், பெண் இருப்பாலர்களும் பயன் பெறும் வகையில், பயிற்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம், டிச., 1ம் தேதி மற்றும் 10ம் தேதியில் பயிற்சி துவக்கப்பட உள்ளது.
விருப்பமுள்ளவர்கள் செங்கல்பட்டு மாவட்ட திட்ட இயக்குனர் மற்றும் வட்டார இயக்க மேலாளர்கள். அச்சிறுப்பாக்கம் -95665 05051, மதுராந்தகம் 96266 34105, சித்தாமூர் 87782 40051, லத்துார் 99768 60716, திருக்கழுக்குன்றம் 98944 96522, திருப்போரூர் 98425 34416, காட்டாங்கொளத்துார் 82486 74283, புனிததோமையார்மலை 96775 41910 ஆகியோரை தொடர்பு கொள்ளலா ம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

