sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

196 கிலோ பறிமுதல் கஞ்சா அழிப்பு ஆவடி போலீசார் நடவடிக்கை

/

196 கிலோ பறிமுதல் கஞ்சா அழிப்பு ஆவடி போலீசார் நடவடிக்கை

196 கிலோ பறிமுதல் கஞ்சா அழிப்பு ஆவடி போலீசார் நடவடிக்கை

196 கிலோ பறிமுதல் கஞ்சா அழிப்பு ஆவடி போலீசார் நடவடிக்கை


ADDED : மே 07, 2024 11:59 PM

Google News

ADDED : மே 07, 2024 11:59 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி, ஆவடி போலீஸ் கமிஷனரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில், போதைப்பொருள் மற்றும் குட்கா புழக்கத்தை கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ள கமிஷனர் சங்கர் உத்தரவிட்டார்.

அதன்படி, ஒவ்வொரு காவல் நிலையங்களில், ஆவடி மதுவிலக்கு அமலாக்கத் துறையின் கீழ் தனிப்படைகள் அமைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கடந்த ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை, 61 கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களிடம் இருந்து, 196 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

நீதிமன்ற உத்தரவுப்படி, பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை அழிக்கப்பதற்கு, ஆவடி கூடுதல் போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், ஆவடி துணை போலீஸ் கமிஷனர் அய்மான் ஜமால் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட 196 கிலோ கஞ்சாவை, நேற்று முன்தினம் செங்கல்பட்டு மாவட்டம், தென்மேல்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் கொட்டி அழிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us