/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'இ -- சிகரெட்' விற்பனை மண்ணடியில் 2 பேர் கைது
/
'இ -- சிகரெட்' விற்பனை மண்ணடியில் 2 பேர் கைது
ADDED : ஆக 19, 2024 02:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.கே.நகர்:அரசால் தடை செய்யப்பட்ட இ - சிகரெட்டுகளை பதுக்கி விற்போரை கண்டறிந்து, சென்னை போலீசார் கைது செய்து வருகின்றனர்.
அந்த வகையில், ஆர்.கே.நகர் போலீசாருக்கு கிடைத்த தகவலின்படி, ஆர்.கே.நகர், இ.எச்.ரோட்டில் நேற்று சோதனையிட்ட போது, அங்கு இருவர் இ - சிகரெட்டுகள் விற்பனை செய்வது தெரிய வந்தது.
இதையடுத்து, போலீசார், இ - சிகரெட் விற்பனையில் ஈடுபட்ட, மண்ணடியைச் சேர்ந்த முகமது ஜபுருல்லா, 30, அபுதாகீர், 36, ஆகியோரை கைது செய்து, 476 இ - சிகரெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

