/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பூந்தமல்லியில் ரூ.2.29 கோடி சிக்கியது
/
பூந்தமல்லியில் ரூ.2.29 கோடி சிக்கியது
ADDED : ஏப் 01, 2024 12:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பூந்தமல்லி:ஏ.டி.எம்., மையத்தில் நிரப்ப உரிய ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட, 2.29 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. பூந்தமல்லி அருகே கோளப்பன்சேரி பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுப்பட்டனர்.
அப்போது, அந்த வழியாக வந்த ஏ.டி.எம்., இயந்திரத்திற்கு பணம் எடுத்து செல்லும் வேனை மடக்கி சோதனை செய்தனர்.
அதில் உரிய ஆவணங்கள் இன்றி, 2.29 கோடி ரூபாய் எடுத்து செல்லப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து, பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், பூந்தமல்லி அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

