sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

வழிப்பறி திருடர்கள் 3 பேருக்கு 'காப்பு'

/

வழிப்பறி திருடர்கள் 3 பேருக்கு 'காப்பு'

வழிப்பறி திருடர்கள் 3 பேருக்கு 'காப்பு'

வழிப்பறி திருடர்கள் 3 பேருக்கு 'காப்பு'


ADDED : ஆக 18, 2024 11:57 PM

Google News

ADDED : ஆக 18, 2024 11:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: பெரம்பூர், கென்னடி சதுக்கம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன், 28. இவர், நேற்று முன்தினம் இரவு, பெரம்பூர், அகரம் வழியாக நடந்து சென்றார். அப்போது, அவரை வழிமறித்த மர்ம நபர், கத்தி முனையில் மிரட்டி 500 ரூபாய் பறித்து சென்றார்.

இது குறித்து விசாரித்த செம்பியம் போலீசார், புழல் பகுதியைச் சேர்ந்த தினேஷ் ராஜ், 24, என்பவரை கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர். இவர் மீது, 12 குற்ற வழக்குகள் உள்ளன.

l அதேபோல, வியாசர்பாடி, மல்லிப்பூ காலனியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன், 44. இவர், நேற்று முன்தினம் இரவு, வியாசர்பாடி, கோட் செட் ரோடு வழியாக நடந்து சென்றார்.

அப்போது, அவரை வழிமறித்த மர்ம நபர், கத்தியை காட்டி மிரட்டி 1,000 ரூபாய் பறித்து சென்றார். இது குறித்து விசாரித்த வியாசர்பாடி போலீசார், வியாசர்பாடி, பி கல்யாணபுரத்தைச் சேர்ந்த தினேஸ்வரன், 27, என்பவரை கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.

l மேலும், பெரம்பூர், ஜமாலியா பகுதியில் மர்ம நபர் நபர் ஒருவர், கத்தியுடன் பொதுமக்களை அச்சுறுத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு வந்த ஓட்டேரி போலீசார், அங்கு ரகளையில் ஈடுபட்ட கொளத்துார், பூம்புகார் நகரைச் சேர்ந்த முரளி கிருஷ்ணன், 27, என்பவரை கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us