/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
341 மதுபாட்டில் பறிமுதல் மூவருக்கு வலைவீச்சு
/
341 மதுபாட்டில் பறிமுதல் மூவருக்கு வலைவீச்சு
ADDED : மே 23, 2024 12:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனாம்பேட்டை, வீட்டில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 341 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து, மூவரை தேடி வருகின்றனர்.
தி.நகர், தெற்கு போக் சாலையில் உள்ள வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து, இரவு நேரங்களில் விற்பதாக, தேனாம்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
நேற்று முன்தினம் இரவு, போலீசார் சம்பந்தப்பட்ட வீட்டில் நுழைந்து சோதித்த போது, அங்கு சட்டவிரோதமாக விற்பனைக்காக, 341 மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது.
மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து, வழக்கில் தொடர்புடைய நிசாந்தினி, சத்யராஜ், மகேஷ்வரி உள்ளிட்ட மூவரை தேடி வருகின்றனர்.

