sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகள் துார் வார நீர்வளத்துறை காத்திருப்பு

/

சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகள் துார் வார நீர்வளத்துறை காத்திருப்பு

சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகள் துார் வார நீர்வளத்துறை காத்திருப்பு

சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகள் துார் வார நீர்வளத்துறை காத்திருப்பு


ADDED : ஆக 19, 2024 01:43 AM

Google News

ADDED : ஆக 19, 2024 01:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகள் வாயிலாக, சென்னையின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. இவற்றின் மொத்த கொள்ளளவு, 11.25 டி.எம்.சி.,யாக உள்ளது.

இந்த ஏரிகள், கட்டப்பட்டது முதல் துார் வாரப்படவில்லை. இதனால், மண், மணல் மட்டுமின்றி, திடக்கழிவுகள் அதிக அளவில் தேங்கியுள்ளதால், 1.90 டி.எம்.சி., அளவிற்கு கொள்ளளவு பாதிக்கப்பட்டு உள்ளது.

நான்கு ஏரிகளின் கொள்ளளவை மீட்பதற்கு துார் வாரும் பணிகளை மேற்கொள்ள, அ.தி.மு.க., ஆட்சியில் திட்டமிடப்பட்டது.

சோழவரம், பூண்டி, செம்பரம்பாக்கம் ஏரிகளை துார் வார, 20.44 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் துவங்கின. புழல் ஏரியை துார் வாரும் செலவிற்கு, 9.90 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.

கடந்த 2021ல் தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும், ஏரியை துார் வார நீர்வளத்துறை நியமித்த ஒப்பந்த நிறுவனத்திற்கு அனுமதி நிறுத்தப்பட்டது.

இதனால், மூன்று ஆண்டுகளாக திட்டம் கிடப்பில் போடப்பட்டு உள்ளது.

பாலாறு வடிநில கோட்ட உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:

அ.தி.மு.க., ஆட்சியில், தொடர்ச்சியாக ஐந்து ஆண்டுகள் துார்வாரும் வகையில், தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு பணிகள் துவங்கின. ஒப்பந்த நிறுவனத்திற்கு இன்னும் ஓராண்டு காலம் அவகாசம் உள்ளது. சோழவரம், பூண்டி ஏரிகள் வறண்டு கிடக்கின்றன.

அக்டோபரில் வடகிழக்கு பருவமழை துவங்க உள்ளதால், அதற்குள், துார் வாருவதற்கான அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us