/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தேர்தலில் ஓட்டளிக்க 48.35 லட்சம் பேர் தயார் ஒரு மாத கால தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது
/
தேர்தலில் ஓட்டளிக்க 48.35 லட்சம் பேர் தயார் ஒரு மாத கால தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது
தேர்தலில் ஓட்டளிக்க 48.35 லட்சம் பேர் தயார் ஒரு மாத கால தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது
தேர்தலில் ஓட்டளிக்க 48.35 லட்சம் பேர் தயார் ஒரு மாத கால தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது
ADDED : ஏப் 18, 2024 12:20 AM
சென்னை,
சென்னை மாவட்டத்தின், 16 சட்டசபை தொகுதிகளில், 19 லட்சத்து 28,461 ஆண் வாக்காளர்கள்; 19 லட்சத்து 95,484 பெண் வாக்காளர்கள்; 1,199 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என, 39 லட்சத்து 25,144 வாக்காளர்கள் உள்ளனர்.
அத்துடன் வடசென்னை தொகுதியில் திருவொற்றியூர் சட்டசபை தொகுதி கூடுதலாக வருகிறது. அங்கு, 2 லட்சத்து, 76,768 வாக்காளர்கள் உள்ளனர்.
தென்சென்னை தொகுதிக்கு, செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து கூடுதலாக வரும், சோழிங்கநல்லுார் தொகுதியில், 6,67,606 வாக்காளர்கள் என, மொத்தமாக, 48 லட்சத்து, 35,672 வாக்காளர்கள் ஓட்டளிக்க உள்ளனர்.
சென்னை மாவட்டத்தின் மூன்று லோக்சபா தொகுதிகளிலும் 107 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர்.
இந்நிலையில், ஓட்டுச்சாவடி அலுவலர்கள் மற்றும் பதற்றமான ஓட்டுச்சாவடிகளில் நுண்பார்வையாளர்களை கணினி குலுக்கல் முறையில் தெரிவு செய்யும் பணி, மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் தலைமையில், அரசியல் கட்சியினர் முன்னிலையில் நேற்று நடந்தது.
பின், ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி:
ஓட்டுச்சாவடி மையங்களில் பணியாற்ற உள்ள, 19,419 அலுவலர்களுக்கான மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்புகள் இன்று நடக்கிறது. அதன்பின், எந்த ஓட்டுச்சாவடி மையத்திற்கு அவர்கள் செல்ல வேண்டும் என்ற ஆணை வழங்கப்படும்.
ஓட்டுச்சாவடி மையங்களில் காலை 5:30 முதல் மாலை, 7:00 மணி வரை, மாதிரி ஓட்டுப்பதிவு நடத்தப்பட்டு, காலை 7:00 முதல் மாலை 6:00 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கும்.
பதற்றமான மற்றும் மிகவும் பதற்றமான 708 ஓட்டுச்சாவடி மையங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டு, பதற்றமான ஓட்டுச்சாவடி மையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

