sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

50 கிலோ உயர்ரக போதை பொருட்கள் ஓராண்டில் ஏர்போர்ட்டில் பறிமுதல்

/

50 கிலோ உயர்ரக போதை பொருட்கள் ஓராண்டில் ஏர்போர்ட்டில் பறிமுதல்

50 கிலோ உயர்ரக போதை பொருட்கள் ஓராண்டில் ஏர்போர்ட்டில் பறிமுதல்

50 கிலோ உயர்ரக போதை பொருட்கள் ஓராண்டில் ஏர்போர்ட்டில் பறிமுதல்


ADDED : பிப் 25, 2025 01:15 AM

Google News

ADDED : பிப் 25, 2025 01:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு, கடந்த ஆண்டில் கடத்தி வரப்பட்ட, உயர் ரக கஞ்சா, மெத் ஆம்பெட்டமைன் போன்ற, 50.50 கிலோ, 'சின்தடிக்' போதை பொருட்கள் சுங்க அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு போதை பொருட்கள் கடத்துவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. சுற்றுலா பயணியர் போல் செல்லும் பலர், வெளிநாடுகளில் உள்ள போதைக் கும்பலுடன் சிண்டிகேட் வைத்து, போதைப் பொருட்களை கடத்தி வருகின்றனர்.

இதை தடுக்கும் முயற்சியில் சுங்கத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2023ம் ஆண்டு முழுதும், சென்னை விமான நிலையத்தில் வெறும், 15.3 கிலோ உயர் ரக போதை பொருட்கள் சிக்கின.

ஆனால் கடந்தாண்டு, உயர்ரக கஞ்சா, மெத் ஆம்பெட்டமைன், கனாபினாய்ட்ஸ், கோகைன் போன்ற, 50.50 கிலோ போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக, டிசம்பரில், 21.47 கிலோ, பிப்ரவரியில், 17.13 கிலோ, நவம்பரில், 3.30 கிலோ, ஜூனில், 2.38 கிலோ, ஜூலையில், 2.53 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. தாய்லாந்து, எத்தியோப்பியா போன்ற நாடுகளில் இருந்து, அதிக போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கடத்திலில் பெண்கள்அதிகம் ஈடுபட்டு வருகின்றனர். இவற்றை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் என, சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us