ADDED : செப் 14, 2024 12:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, செப். 14-
தாம்பரம் ரயில்வே யார்டில் மேம்பாட்டு பணிகள், நாளை காலை 9:00 முதல் இரவு 7:00 மணி வரை நடக்க உள்ளன. இதனால், இந்த தடத்தில் வழக்கமாக செல்ல வேண்டிய 65 மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
கடற்கரை - தாம்பரம் இடையே 32 பயணியர் மின்சார சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
சிறப்பு ரயில்
ஓணம் பண்டிகையையொட்டி, சென்ட்ரலில் இருந்து வரும் 17ம் தேதி மாலை 3:00 மணிக்கு சிறப்பு ரயில் புறப்படும். டிக்கெட் முன்பதிவு துவங்கி உள்ளது.