/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நாய் கடித்த 5 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி இறப்பு
/
நாய் கடித்த 5 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி இறப்பு
நாய் கடித்த 5 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி இறப்பு
நாய் கடித்த 5 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி இறப்பு
ADDED : ஆக 15, 2024 12:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரக்கோணம், அரக்கோணம் அடுத்த கணபதிபுரத்தைச் சேர்ந்தவர் பாலாஜி மகன் நிர்மல்ராஜ், 5. வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த சிறுவன் நிர்மல்ராஜை, தெரு நாய் ஒன்று ஜூன் மாதம் கடித்து குதறியது.
முகம், வாய், கை, கால் என, பல இடங்களில் காயமடைந்த சிறுவனை மீட்டு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
அங்கு, முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். அங்கு, சிகிச்சை பலனின்றி, சிறுவன் நிர்மல்ராஜ் நேற்று உயிரிழந்தான். அரக்கோணம் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.