sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கோவில் தீமிதி விழாவில் 7 வயது சிறுவன் தீக்காயம்

/

கோவில் தீமிதி விழாவில் 7 வயது சிறுவன் தீக்காயம்

கோவில் தீமிதி விழாவில் 7 வயது சிறுவன் தீக்காயம்

கோவில் தீமிதி விழாவில் 7 வயது சிறுவன் தீக்காயம்


ADDED : ஆக 13, 2024 12:12 AM

Google News

ADDED : ஆக 13, 2024 12:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி அருகே காட்டுக்கொள்ளைமேடு கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் நேற்று முன்தினம் இரவு தீமிதி திருவிழா நடந்தது.

நுாற்றுக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து வேண்டுதலை நிறைவேற்றினர். அதே கிராமத்தை சேர்ந்த மணிகண்டன், 47, என்பவர், 7 வயது மகனுடன் விரதம் இருந்து தீ மிதிக்க வந்தார். சிறுவன் தயக்கம் காட்டிய நிலையில், மகனின் கையை பிடித்துக்கொண்டு மணிகண்டன் தீக்குழியில் இறங்கினார்.

அப்போது சிறுவன் தடுமாறி விழுந்தார். சுற்றி இருந்தவர்கள் ஓடிச்சென்று சிறுவனை மீட்டனர். தீக்காயம் அடைந்த சிறுவன், சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொளத்துார்: கொளத்துார், ஸ்ரீதேவி கங்கையம்மன் கோவிலில் நேற்று முன்தினம் இரவு 8:00 மணியளவில், தீமிதி விழா நடைபெற்றது. இதில் 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று தீ மிதித்து. நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இதில், கொளத்துார், வடக்கு மாடவீதியைச் சேர்ந்த வேலு, 45, என்பவரும் தீ மிதித்தார். அப்போது, எதிர்பாராத விதமாக இடறி விழுந்ததில், இடது பக்க மார்பு மற்றும் வலதுகால் முட்டியில் தீக்காயம் ஏற்பட்டது. அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.






      Dinamalar
      Follow us