sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஹோட்டலில் மாமூல் கேட்ட போலீஸ்காரர் மீது வழக்கு பதிவு

/

ஹோட்டலில் மாமூல் கேட்ட போலீஸ்காரர் மீது வழக்கு பதிவு

ஹோட்டலில் மாமூல் கேட்ட போலீஸ்காரர் மீது வழக்கு பதிவு

ஹோட்டலில் மாமூல் கேட்ட போலீஸ்காரர் மீது வழக்கு பதிவு


ADDED : ஜூன் 16, 2024 12:28 AM

Google News

ADDED : ஜூன் 16, 2024 12:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடபழனி, வடபழனி 100 அடி சாலையில் தனியார் ேஹாட்டல் அமைந்துள்ளது. கடந்த 31ம் தேதி, ேஹாட்டலுக்கு வந்த மர்ம நபர், தன்னை விபச்சார தடுப்பு பிரிவு அதிகாரி எனக் கூறியுள்ளார்.

மேலும், ேஹாட்டலில் பாலியல் தொழில் நடைபெறுவதாகவும், தணிக்கை செய்ய வேண்டும் எனவும் கூறி, தணிக்கை செய்துள்ளார்.

அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த ேஹாட்டல் மேலாளர் ஜெயராஜ், இது குறித்து வடபழனி போலீசில் புகார் அளித்தார். விசாரணையில், திருவான்மியூரைச் சேர்ந்த பாவாஷா, 26, ஆயுதப்படையில் காவலராக பணிபுரிந்தவர் என, தெரியவந்தது.

விசாரணைக்கு பின், வடபழனி போலீசார் அவர் மீது நேற்று வழக்கு பதிவு செய்தனர்.

இவர் கடந்த 2022ல் திருவான்மியூரில் உள்ள 'ஸ்பா'விற்கு சென்று, துணை கமிஷனரின் தனிப்படை பிரிவு போலீஸ் எனக் கூறி 5,000 ரூபாய் பெற்று, போலீசாரிடம் சிக்கியது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us