sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

வண்டலுாரில் நீர்யானை குட்டி ஈன்றது

/

வண்டலுாரில் நீர்யானை குட்டி ஈன்றது

வண்டலுாரில் நீர்யானை குட்டி ஈன்றது

வண்டலுாரில் நீர்யானை குட்டி ஈன்றது


ADDED : ஆக 22, 2024 06:40 PM

Google News

ADDED : ஆக 22, 2024 06:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாம்பரம்:வண்டலுார் உயிரியல் பூங்காவிற்கு, 2001ல் சுவிட்சர்லாந்தில் இருந்து, வாம்பூரி என்ற ஆண் நீர்யானை கொண்டு வரப்பட்டது. சில மாதங்கள் கழித்து, கர்நாடகாவில் இருந்து சவுந்தர்யா என்ற பெண் நீர்யானை கொண்டு வரப்பட்டது.

இவற்றை இனப்பெருக்கம் செய்ய வைத்து, தற்போது ஐந்து பெண், இரண்டு ஆண் என, ஏழு நீர்யானைகள் உள்ளன.

இதை தவிர, விலங்கு பரிமாற்ற திட்டத்தின் கீழ், இங்கிருந்து ஐதராபாத், குஜராத், ஒடிசா ஆகிய பூங்காக்களுக்கு நீர்யானைகள் அனுப்பப்பட்டு உள்ளன. ஏழு நீர்யானைகளும், தனித்தனி கூண்டில் பராமரிக்கப்பட்டு வந்தன.

'மிக்ஜாம்' புயலின் போது, கூண்டுகளில் முழுதுமாக தண்ணீர் நிரம்பியதால், பெண் கூண்டிற்குள், ஆண் நீர்யானைகள் சென்றதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து, கர்ப்பம் தரித்திருந்த பெண் நீர்யானை ஒன்று, நேற்று முன்தினம், ஒரு குட்டியை ஈன்றுள்ளது. குட்டியையும், தாய் நீர்யானையையும், பூங்கா மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us