ADDED : ஆக 15, 2024 12:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓட்டேரி, பீர்க்கங்கரணை காவல் நிலைய எல்லையில் வாலிபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் வாலிபரை கைது செய்து விசாரித்தபோது, பெரம்பூரைச் சேர்ந்த அஜய், 21, என்பது தெரியவந்தது.
இவர் மீதான கொலை வழக்கில் 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் தண்டனை உறுதி செய்யப்பட்டது. ஆனால், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இதையடுத்து, அஜய் ஓட்டேரி போலீசாரிடம் பீர்க்கங்கரணை போலீசார் ஒப்படைத்தனர்.