/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோவிலில் அதிகார நந்தி புறப்பாடு
/
மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோவிலில் அதிகார நந்தி புறப்பாடு
மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோவிலில் அதிகார நந்தி புறப்பாடு
மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோவிலில் அதிகார நந்தி புறப்பாடு
ADDED : மே 16, 2024 12:40 AM

மாடம்பாக்கம்,
சேலையூர் அடுத்த மாடம்பாக்கத்தில், 1,500 ஆண்டுகள் பழமையான தேனுபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், 11 நாட்கள் நடக்கும் பிரம்மோற்சவ பெருவிழா, மே., 13ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.
இந்நிகழ்ச்சியின், மூன்றாம் நாளான நேற்று காலை 7:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. தொடர்ந்து, அதிகார நந்தி புறப்பாடு நடந்தது.
நான்கு மாட வீதிகள் வழியாக சோமாஸ்கந்தர், அதிகார நந்தி வாகனத்தில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
ஏழாம் நாள் விழாவான, வரும் 19ல் தேரோட்டம் நடக்கிறது. காலை 6:00 முதல் 7:30 மணிக்குள் சுவாமி தேரில் எழுந்தருளி வீதியுலா செல்கிறார்.
அதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.