/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குறைதீர் முகாமில் 64 மனுக்கள் மீது நடவடிக்கை
/
குறைதீர் முகாமில் 64 மனுக்கள் மீது நடவடிக்கை
ADDED : மே 30, 2024 12:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆவடி, திருமுல்லைவாயில், எஸ்.எம்.நகரில் உள்ள போலீஸ் கன்வென்சன் சென்டரில், நேற்று காலை ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது.
வாரந்தோறும் புதன்கிழமை நடக்கும் இந்த முகாமில், பொதுமக்களிடம் இருந்து 64 மனுக்களை போலீஸ் கமிஷனர் சங்கர் நேரடியாக பெற்று, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாயிலாக தீர்வு காண உத்தரவிட்டார்.
இம்முகாமில், ஆவடி போலீஸ் கமிஷனரக கட்டுப்பாட்டில் உள்ள 25 காவல் நிலையங்களின் இன்ஸ்பெக்டர்கள், போலீசார் மற்றும் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்.