sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 20, 2025 ,புரட்டாசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

நியூ ஆவடி சாலையில் அடாவடி குடிநீர் வாரிய இடம் ஆக்கிரமிப்பு

/

நியூ ஆவடி சாலையில் அடாவடி குடிநீர் வாரிய இடம் ஆக்கிரமிப்பு

நியூ ஆவடி சாலையில் அடாவடி குடிநீர் வாரிய இடம் ஆக்கிரமிப்பு

நியூ ஆவடி சாலையில் அடாவடி குடிநீர் வாரிய இடம் ஆக்கிரமிப்பு


ADDED : ஜூலை 29, 2024 01:51 AM

Google News

ADDED : ஜூலை 29, 2024 01:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அண்ணா நகர்:நியூ ஆவடி சாலையோரத்தில், குடிநீர் வாரிய இடத்தில் சாலையோர ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது.

அண்ணா நகர் மண்டலத்தில், வில்லிவாக்கம் - கீழ்ப்பாக்கம் வரை, நியூ ஆவடி சாலை உள்ளது.

இதில், பாடியை நோக்கிச் செல்லும் சாலையோரம் ஐ.சி.எப்., ரயில்வேக்கும், வில்லிவாக்கம் - கீழ்ப்பாக்கம் நோக்கி செல்லும் சாலையோரம் குடிநீர் வாரியத்திற்கு சொந்தமாகவும் இடங்கள் உள்ளன.

இந்த இருபுறங்களில் உள்ள சாலையோரங்களில் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு உள்ளதால், சாலை குறுகலாகி காலையும்,மாலையும் கடும் போக்குவரத்து நெரிசல் நீடிக்கிறது.

அதேபோல், இருபுறங்களிலும் சாலையோரங்களில் அத்துமீறி குப்பை கொட்டப்படுகிறது. குறிப்பாக, கிழக்கு அண்ணா நகர், அயனாவரம் பகுதியில் உள்ள குடிநீர் வாரியத்திற்குச் சொந்தமான இடத்தில், சாலையோரத்தில் சிலர் அத்துமீறி குப்பை கொட்டி வருகின்றனர்.

இதனால், சாலை முழுதும் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. அதே இடத்தில், பல நாட்களாக நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களில், இரவு நேரங்களில் சமூக விரோத செயல்கள் நடக்கின்றன.

அதேபோல், அண்ணா நகர் ஆர்.டி.ஓ., அலுவலகம் எதிரிலும், அத்துமீறி கட்டட கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. குடிநீர் வாரிய இடத்தை ஆக்கிரமித்து, கடைகள் நடத்தப்படுகின்றன.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை கண்காணித்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி, குடிநீர் வாரிய இடத்தில் தடுப்பு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், அத்துமீறி நிறுத்தப்படும் வாகனங்களையும் அகற்ற வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.






      Dinamalar
      Follow us