ADDED : ஆக 28, 2024 12:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்றத்துார்,
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிகுறித்து பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசியதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், குன்றத்துார் அருகே பழந்தண்டலம் பகுதியில் காஞ்சிபுரம் மாவட்ட செயலர் சோமசுந்தரம்தலைமையில் அ.தி.மு.க.,வினர் நுாற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
அப்போது, அண்ணாமலைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி, அவரது உருவ பொம்மையை எரித்தனர்.

