sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மது போதையில் தகராறு அ.தி.மு.க., நிர்வாகி கைது

/

மது போதையில் தகராறு அ.தி.மு.க., நிர்வாகி கைது

மது போதையில் தகராறு அ.தி.மு.க., நிர்வாகி கைது

மது போதையில் தகராறு அ.தி.மு.க., நிர்வாகி கைது


ADDED : பிப் 15, 2025 12:34 AM

Google News

ADDED : பிப் 15, 2025 12:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அசோக் நகர்,

அசோக் நகர் 14வது தெருவைச் சேர்ந்தவர் சுந்தரராஜன், 72. இவரது மகன்கள் தீபக், பிரேம்நாத் ஆகியோர், தங்கள் மனைவியருடன், உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு, கடந்த 12ம் தேதி பைக்கில் வீடு திரும்பினர்.

அசோக் நகர் 13வது தெரு வழியாக வந்தபோது, அங்கு மது போதையில் இருந்த இருவர், அவர்களிடம் அசிங்கமாக பேசியுள்ளனர். இதனால், இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கைக்கலப்பாக மாறியது. இது குறித்து அசோக் நகர் போலீசார் விசாரித்தனர். இதில், அசோக் நகர் 13வது தெருவைச் சேர்ந்த அ.தி.மு.க., தி.நகர் இளைஞர் மற்றும் பெண்கள் பாசறை செயலர் இளஞ்செழியன், 38, மற்றும் அசோக் நகர், புதுார் 2வது தெருவைச் சேர்ந்த சரத்குமார், 29, ஆகியோரை, நேற்று முன்தினம் கைது செய்தனர்.

இதில், இளஞ்செழியன் மீது, அசோக் நகர் மற்றும் கே.கே.நகர் காவல் நிலையத்தில் 12 குற்ற வழக்குகள் உள்ளன. அதேபோல, சரத்குமார் மீது கே.கே.நகர், விருகம்பாக்கம், அசோக் நகர், கே.கே.நகர் உள்ளிட்ட காவல் நிலையங்களில், நான்கிற்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதும் தெரிவந்தது.






      Dinamalar
      Follow us