sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் சிக்கினார்

/

விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் சிக்கினார்

விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் சிக்கினார்

விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் சிக்கினார்


ADDED : ஜூன் 22, 2024 05:34 PM

Google News

ADDED : ஜூன் 22, 2024 05:34 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேப்பேரி: பெரும்பாக்கத்தில் உள்ள, 'இண்டிகோ ஏர்லைன்ஸ்' நிறுவன வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு, கடந்த 18ம் தேதி இரவு, மர்மநபர் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பி உள்ளார்.

அதில், 'சென்னை - மும்பை செல்லும் விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. இரவு 9:30 மணியளவில் வெடிக்கும்' என குறிப்பிடப்பட்டிருந்தது.

உடனே, இண்டிகோ ஏர்லைன்ஸ் வாடிக்கையாளர் சேவை மையத்தில் இருந்து, விமான நிலைய அதிகாரிகளுக்கும் காவல் துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டன.

விமான நிலைய அதிகாரிகள் மற்றும் போலீசாரின் சோதனையில், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது. இது தொடர்பாக, சென்னை சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியைச் சேர்ந்த பிரசன்னா, 27, என்பவர் மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.

அவரை நேற்று முன்தினம், போலீஸ் இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் தலைமையிலான போலீசார், திருவையாறில் வைத்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, மொபைல் போன், இன்டர்நெட் மோடம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

விசாரணையில், பெரம்பூரில் வசிக்கும் குடும்பத்தினருடன் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, அவர்களை பழிவாங்கும் நோக்கில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.






      Dinamalar
      Follow us