ADDED : ஜூலை 25, 2024 06:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: அமராவதி அணையில் இருந்து, இன்று முதல் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டத்தை சேர்ந்த, 21,867 ஏக்கர் பாசன நிலங்களுக்கு, 10 அமராவதி பழைய வாய்க்கால்கள் வழியே, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, 25,250 ஏக்கர் புதிய பாசன நிலங்களுக்கு, அமராவதி பிரதானக் கால்வாய் வழியாக, அமராவதி அணையில் இருந்து, இன்று முதல் ஆக., 8 வரை தண்ணீர் திறந்து விட, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள, 47,117 ஏக்கர் பாசன நிலங்கள் பாசன வசதி பெறும்.