sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பொது நகைக்கடை கொள்ளையில்  மேலும் ஒருவர் சிக்கினார்

/

பொது நகைக்கடை கொள்ளையில்  மேலும் ஒருவர் சிக்கினார்

பொது நகைக்கடை கொள்ளையில்  மேலும் ஒருவர் சிக்கினார்

பொது நகைக்கடை கொள்ளையில்  மேலும் ஒருவர் சிக்கினார்


ADDED : மே 16, 2024 12:48 AM

Google News

ADDED : மே 16, 2024 12:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி, ஆவடி அடுத்த முத்தாபுதுப்பேட்டை, எல்லையம்மன் நகரைச் சேர்ந்தவர் பிரகாஷ், 33, வீட்டின் கீழ்த்தளத்தில் நகைக்கடை மற்றும் அடகு கடை நடத்தி வருகிறார்.

கடந்த மாதம் 15ம் தேதி, இவரது கடைக்கு வந்த மர்ம நபர்கள், துப்பாக்கி முனையில் பிரகாஷை மிரட்டி, 2.5 கிலோ தங்க நகை, வெள்ளி நகை மற்றும் 5 லட்சம் ரூபாய் கொள்ளையடித்து சென்றனர்.

ஆவடி முத்தாபுதுப்பேட்டை போலீசார், எட்டு தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்த வழக்கு தொடர்பாக, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தினேஷ் குமார், ஷீட்டான் ராம், அசோக் குமார் மற்றும் சுரேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் இருந்து 808 கிராம் தங்க நகை, 4.3 கிலோ வெள்ளி நகைகள், 2 ஐ - போன் மற்றும் 60,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், வழக்கில் தொடர்புடைய ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பஜன்லால், 26, என்பவரை தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரிடம் இருந்து, 27 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளிகளான ஜெகதால், சுக்தேவ் மற்றும் ஹனுமன் ஆகியோரை, தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us