sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

விபச்சாரத்தில் வங்கதேசத்தவர் கைது

/

விபச்சாரத்தில் வங்கதேசத்தவர் கைது

விபச்சாரத்தில் வங்கதேசத்தவர் கைது

விபச்சாரத்தில் வங்கதேசத்தவர் கைது


ADDED : செப் 18, 2024 12:16 AM

Google News

ADDED : செப் 18, 2024 12:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேளச்சேரி, வேளச்சேரி, வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த வங்கதேசத்தவர் இருவர் கைது செய்யப்பட்டனர்.

மோசா, 27 மற்றும் இவரது அண்ணி பாத்திமா, 25, ஆகியோர் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள்.

அந்நாட்டைச் சேர்ந்த ரும்கி, 24, என்பவர், தனியார் நிறுவனத்தில் வேலை என கூறி, இந்தியாவுக்கு அழைத்து வந்து, சென்னையில், ஹபீல், 28, ஜோசித், 30, ஆகிய வங்கதேசத்தவர்களிடம் ஒப்படைத்து, 40,000 ரூபாய் பெற்றுள்ளார்.

பின், மோசா, பாத்திமா ஆகியோரை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி உள்ளனர்.

இவர்களில் மோசாவையும், யாசின்மியா என்பவரையும் போலீசார் கைது செய்தனர். தலைமறைவான, பாத்திமா, ரும்கி, ஹபீல், ஜோசித் ஆகியோரை தேடுகின்றனர்.

இவர்கள் அனைவரும் சட்டவிரோதமாக, வங்கதேசத்தில் இருந்து திரிபுரா எல்லை வழியாக இந்தியாவுக்குள் வந்தது விசாரணையில் தெரிந்தது.

இவர்கள் மீது, பாலியல் தொழில், சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

வண்ணாரப்பேட்டை


வண்ணாரப்பேட்டை சோலையப்பன் தெருவில் உள்ள ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடப்பதாக விபச்சார தடுப்பு பிரிவு போலீசாருக்கு, தகவல் கிடைத்தது.

போலீசாரின் விசாரணையில், கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த கீதா, 38, என்பவர் பாலியல் தொழில் நடத்தி வந்தது தெரியவந்தது. நேற்று அவரை கைது செய்த போலீசார், அவரிடம் சிக்கிய பெண்ணை மீட்டு அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us