/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கன்டெய்னர் லாரி மோதி பைக்கில் சென்றவர் பலி
/
கன்டெய்னர் லாரி மோதி பைக்கில் சென்றவர் பலி
ADDED : மார் 06, 2025 11:46 PM

மாதவரம் :மணலி அருகே உள்ள பர்மா நகரை சேர்ந்தவர் திவாஸ், 21. திருவெற்றியூரில் உள்ள ராயல் என்பீல்ட் புல்லட் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
நேற்று மதியம். மாதவரம் 200 அடி சாலையில் இருந்து. புழல் நோக்கி திவாஸ் அவரது யமஹா பைக்கில் சென்றார்.
இரட்டை ஏரி அருகே வந்த போது, இவருக்கு பின்னால் வந்த கன்டெய்னர் லாரி, பைக்கின் பக்குவாட்டு பகுதியில் இடித்தது.
அதனால், கீழே விழுந்த திவாஸ் எழுவதற்குள், லாரியின் பின் பக்க சக்கரம் திவாஸ் மீது ஏறி இறங்கியது. இதில், தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே திவாஸ் பலியானார்.
விபத்து குறித்து, மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, கன்டெய்னர் லாரி டிரைவரான உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த ரகீஷ்அகமது, 33, என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.