sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மத்திய அரசு அலுவலகத்திற்கு குண்டு மிரட்டல்

/

மத்திய அரசு அலுவலகத்திற்கு குண்டு மிரட்டல்

மத்திய அரசு அலுவலகத்திற்கு குண்டு மிரட்டல்

மத்திய அரசு அலுவலகத்திற்கு குண்டு மிரட்டல்


ADDED : பிப் 15, 2025 12:28 AM

Google News

ADDED : பிப் 15, 2025 12:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி: ஆவடி, எச்.வி.எப்., சாலையில், மத்திய அரசின் கனரக வாகனங்கள் தயாரிப்பு தொழிற்சாலை மற்றும் ஏ.வி.என்.எல்., எனும் இன்ஜின் தயாரிப்பு தொழிற்சாலையின் தலைமை அலுவலகம் உள்ளது. இங்கு, 134 பேர் பணியாற்றி வருகின்றனர்.

இந்த அலுவலகத்திற்கு வெடிகுண்டு வைத்துள்ளதாகவும், மதியம் 2:55 மணிக்கு வெடிக்கும் எனவும், நேற்று காலை 7:44 மணிக்கு மின்னஞ்சல் வாயிலாக மிரட்டல் வந்துள்ளது.

இணைய சேவை பிரச்னையால், காலையில் இந்த மின்னஞ்சலை, ஊழியர்களால் பார்க்க முடியவில்லை. மதியம் 2:30 மணிக்கு, வெடிகுண்டு மிரட்டலை பார்த்த பின், ஊழியர்கள் அனைவரும் அலறியடித்து வெளியே ஓடினர்.

ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபணர் சண்முகம் தலைமையிலான குழுவினர் வந்து, மதியம் 2:55 மணியில் இருந்து 5:20 மணி வரை, ஜான்சி என்ற மோப்ப நாயுடன், தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதில் வெடிகுண்டு மிரட்டல், வெறும் புரளி என்பது உறுதிசெய்யபட்டது. போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us