/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பட்டினப்பாக்கம் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்
/
பட்டினப்பாக்கம் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்
ADDED : ஆக 06, 2024 12:48 AM
சென்னை,
பட்டினப்பாக்கம், எம்.ஆர்.சி.நகரில், செட்டிநாடு வித்யாஷ்ரம் மேல்நிலைப்பள்ளி உள்ளது. நேற்று மதியம், பள்ளிக்கு ஒரு இ-மெயில் வந்துள்ளது. அதில், பள்ளியில் வெடிகுண்டு வைத்திருப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.
உடனே பள்ளி நிர்வாகத்தினர், பட்டினப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் பள்ளி முழுதும் சோதனை மேற்கொண்டனர்.
ஒரு மணி நேரம் நடத்தப்பட்ட சோதனையில், எந்த விதமான வெடி பொருட்களும் கிடைக்காததால், மிரட்டல் வெறும் புரளி என தெரிந்தது.
சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பட்டினப்பாக்கம் போலீசார், மிரட்டல் விடுத்தவர் குறித்து விசாரிக்கின்றனர்.
இதேபோல, கடந்த ஜூலை, 17ம் தேதியும், இப்பள்ளிக்கு இ-மெயில் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது.