/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கு வெடிகுண்டு மிரட்டல்
/
எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கு வெடிகுண்டு மிரட்டல்
ADDED : ஜூன் 30, 2024 12:31 AM
மறைமலை நகர், மறைமலை நகர் அடுத்த பொத்தேரியில் எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஆயிரக்கணக்கானோர் பயில்கின்றனர்.
இந்நிலையில், நேற்று மதியம் 12:00 மணிக்கு, பல்கலைக்கழக வளாகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக, 'இ - -மெயில்' வந்தது. இதுகுறித்து, கல்லூரி நிர்வாகத்தினர், மறைமலை நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தாம்பரம் மாநகர காவல் வெடிகுண்டு நிபுணர்கள் பல்கலைக்கழக வளாகம், நூலகம், ஆடிட்டோரியம், மருத்துவமனை வளாகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், நான்கு மணி நேரம் சோதனை நடத்தினர். இதில், வெடிகுண்டு ஏதும் இல்லை என தெரியவந்தது.
மறைமலைநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

