ADDED : மார் 13, 2025 11:36 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்போரூர் கேளம்பாக்கம் அடுத்த தாழம்பூர், அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ்.48; பால் வியாபாரி. இவர் நேற்று முன்தினம் இரவு 8:00 மணியளவில், வீட்டின் அருகே மாட்டுக்கொட்டையில் மின் விளக்குகளை அணைத்துள்ளார்.
அப்போது, சுரேஷ் மீது மின்சாரம் பாய்ந்தது.உடனே அங்கிருந்தோர் சுரேஷை மீட்டு, படூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சுரேஷ் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
தகவல் அறிந்த தாழம்பூர் போலீசார், சடலத்தை கைப்பற்றி, வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.