/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
உதவி செவிலியர் பயிற்சி விண்ணப்பிக்க அழைப்பு
/
உதவி செவிலியர் பயிற்சி விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : ஆக 30, 2024 12:15 AM
சென்னை, தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனையில் உள்ள, உதவி செவிலியர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என, மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்தி குறிப்பு:
தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில், மருத்துவ இணையியல் படிப்பான இரண்டாண்டு உதவி செவிலியர் பயிற்சி துவக்கப்பட உள்ளது.
இப்பயிற்சியில், மாநகராட்சியில் பணிபுரியும் பணியாளர்களின் வாரிசுகளுக்கும், பள்ளிகளில் பயின்ற மாணவியருக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளில் படிக்கும் மாணவியரும் விண்ணப்பிக்கலாம்.
இந்த உதவி செவிலியர் பயிற்சிக்கு, பிளஸ் 2ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இயக்குனர், தொற்று நோய் மருத்துவமனை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, தண்டையார்பேட்டை என்ற முகவரில் உள்ள மருத்துவமனை அலுவலகத்தில், செப்., 2ம் தேதி முதல் 9ம் தேதி வரை விண்ணப்பங்களை பெறலாம்.
காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை வேலை நாட்களில், 50 ரூபாய் செலுத்தி விண்ணப்ப படிவங்கள் பெற்று, செப்., 11ம் தேதி 5:00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

