ADDED : மார் 11, 2025 01:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தரமணி, தரமணி ரயில் நிலையம் அருகில், போதைப் பொருட்கள் இருப்பதாக தரமணி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
நேற்று முன்தினம் இரவு நடத்திய சோதனையில், வேளச்சேரியைச் சேர்ந்த வினோத்குமார், 33, என்பவர், போதை பொருள் விற்றுக் கொண்டிருந்தார்.
இவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 150 போதை மாத்திரைகள் மற்றும் 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.