/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி ரயில் சேவை பாதிப்பு
/
சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி ரயில் சேவை பாதிப்பு
ADDED : ஜூன் 29, 2024 12:23 AM

சென்னை, சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி தடத்தில், 100க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த தடத்தில், ஆரம்பாக்கம் - எளாவூர் இடையே, சென்னையில் இருந்து மேற்கு வங்கம் செல்லும் 'ஹவுரா எக்ஸ்பிரஸ்' விரைவு ரயிலில், பயணி ஒருவர் அபாய சங்கிலியை இழுக்க, நேற்று மாலை 6:28 மணிக்கு ரயில் நின்றது.
இதனால், சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி மற்றும் சூலுார்பேட்டை செல்ல வேண்டிய மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
தொடர்ந்து, 6:38 மணிக்கு அபாய சங்கலியை சீரமைத்து ரயில் புறப்பட்ட பின், மற்ற ரயில்கள் புறப்பட்டன.
இதனால், சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு செல்ல வேண்டிய மின்சார ரயில்கள், 15 - 30 நிமிடங்கள் வரை தாமதமாக சென்றன. சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்தில் பயணியர் கூட்டம் அலைமோதியது. நெரிசலால் பயணியர் கடும் அவதிக்குள்ளாகினர்.
இதற்கிடையே மின்சார ரயில்கள், 15 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இரவு 8:00 மணிக்கு பின், சென்னை - கும்மிடிப்பூண்டி தடத்தில் வழக்கம்போல் ரயில்கள் இயக்கப்பட்டன.

