/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நடைபாதை ஆக்கிரமிப்பு அபராதம் வசூலிப்பு
/
நடைபாதை ஆக்கிரமிப்பு அபராதம் வசூலிப்பு
ADDED : மார் 09, 2025 01:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவொற்றியூர், திருவொற்றியூர் மண்டலத்தில், 5வது வார்டு முதல், 14 வது வார்டு வரையிலான, திருவொற்றியூர் நெடுஞ்சாலையில், நடைபாதையை ஆக்கிரமித்து, விளம்பர பலகைகள், பேனர்கள் வைத்திருப்பதாக புகார் எழுந்தது.
மண்டல அதிகாரிகள் மூன்று நாட்களாக, சாலையோரம் மற்றும் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றினர். 40 கடைகளின் ஆக்கிரமிப்பு விளம்பர பலகைகள், பேனர்கள் உள்ளிட்டவை அகற்றப்பட்டன. தொடர்ந்து, 63,900 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.