sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

வி.ஜி.பி., கேளிக்கை பூங்கா மீது நீலாங்கரை போலீசில் புகார்

/

வி.ஜி.பி., கேளிக்கை பூங்கா மீது நீலாங்கரை போலீசில் புகார்

வி.ஜி.பி., கேளிக்கை பூங்கா மீது நீலாங்கரை போலீசில் புகார்

வி.ஜி.பி., கேளிக்கை பூங்கா மீது நீலாங்கரை போலீசில் புகார்


ADDED : மார் 15, 2025 12:23 AM

Google News

ADDED : மார் 15, 2025 12:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நீலாங்கரை, திருநின்றவூர், நேரு நகரை சேர்ந்தவர் பாரூக், 35. அவரது குடும்பத்தார், உறவினர்கள் என, 11 பேர், கடந்த 2ம் தேதி, ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள வி.ஜி.பி., பொழுதுபோக்கு விளையாட்டு பூங்காவிற்கு சென்றனர்.

அங்கு, பாரூக்கின் மகன் முஹம்மது அர்ஷத், 6, 'டிரம்ப்போலின்' என்ற விளையாட்டில் ஈடுபட்டிருந்தபோது, தவறி விழுந்து, வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

அப்போது, சிறுவனை மீட்கவும், உதவி செய்யவும், கேளிக்கை பூங்கா ஊழியர்கள் முன்வரவில்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து, மகனை மீட்ட பாரூக், கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதித்தார்.

இந்நிலையில், சிறுவனுக்கு இதுவரை 1.50 லட்சம் ரூபாய் வரை செலவு செய்துள்ளதாகவும், பாதுகாப்பற்ற முறையில் செயல்பட்ட கேளிக்கை பூங்கா மீது நடவடிக்கை எடுக்கும்படி, நேற்று நீலாங்கரையில் பாரூக் புகார் அளித்தார். போலீசார், வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us