sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கட்டுமான நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் அபராதம்

/

கட்டுமான நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் அபராதம்

கட்டுமான நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் அபராதம்

கட்டுமான நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் அபராதம்


ADDED : செப் 11, 2024 12:15 AM

Google News

ADDED : செப் 11, 2024 12:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, சென்னை, அசோக் நகர் மாந்தோப்பு காலனி பகுதியில், அனன்யா கிருஷ்ணா கன்ஸ்டிரக் ஷன்ஸ் நிறுவனம் சார்பில், குடியிருப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் வீடு வாங்க, கே.ஆர்.அனந்தராமன் என்பவர் பணம் செலுத்தினார்.

இதற்கான ஒப்பந்த அடிப்படையில், வீட்டில் அடிப்படை வசதிகளை கட்டுமான நிறுவனம் முறையாக முடித்துக் கொடுக்கவில்லை.

இது குறித்த வழக்கை, 2021ல் விசாரித்த ஆணையம், பணி நிறைவு சான்றிதழை ஒப்படைக்க வேண்டும், 5 லட்சம் ரூபாய் வைப்பு நிதியை கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட உத்தரவுகளை பிறப்பித்தது.

இந்த உத்தரவை, சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனம் செயல்படுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. இது தொடர்பான மனுவை விசாரித்த ரியல் எஸ்டேட் ஆணையம் பிறப்பித்த உத்தரவு:

பணி நிறைவு சான்றிதழை அளிக்காதது, அடிப்படை வசதிகளுக்கான இணைப்பின்றி வீட்டை ஒப்படைத்தது போன்ற குற்றச்சாட்டுகள் அப்படியே உள்ளன.

இதில், 5 லட்சம் ரூபாய் வைப்பு நிதி செலுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட உத்தரவுகளை, கட்டுமான நிறுவனம் செயல்படுத்தவில்லை.

எனவே, ரியல் எஸ்டேட் சட்ட விதிகளின் அடிப்படையில், அந்த கட்டுமான நிறுவனத்திற்கு, 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. மேலும், இந்த குறிப்பிட்ட நிறுவனம் மீது, ரியல் எஸ்டேட் ஆணைய ஆலோசகர் வாயிலாக கிரிமினல் புகார் அளிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us