sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மின்சாரம் பாய்ந்து கட்டட தொழிலாளி பலி

/

மின்சாரம் பாய்ந்து கட்டட தொழிலாளி பலி

மின்சாரம் பாய்ந்து கட்டட தொழிலாளி பலி

மின்சாரம் பாய்ந்து கட்டட தொழிலாளி பலி


ADDED : மே 24, 2024 12:17 AM

Google News

ADDED : மே 24, 2024 12:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பூந்தமல்லி, மட்டுப்பாக்கத்தில், டிரான்ஸ்பார்மர் அருகே சாரம் அமைத்து கட்டட பணியில் ஈடுபட்ட தொழிலாளி, மின்சாரம் பாய்ந்து பலியானார்.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அன்பழகன்,29; கட்டட தொழிலாளி. இவர், பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம், அம்மன் நகரில், வீடு கட்டும் பணியில் ஈடுபட்டு வந்தார்.

கட்டடத்தின் வெளிப்புற சுவரில் சிமென்ட் பூச்சு பணிக்கு, அருகே உள்ள மின்சார டிரான்ஸ்பார்மரை ஒட்டி கொம்புகள் அமைத்து, ஆபத்தான முறையில் சாரம் கட்டப்பட்டிருந்தது.

நேற்று, இந்த சாரம் மீது ஏறி நின்றபடி, அன்பழகன் பணியில் ஈடுபட்டார். அப்போது, எதிர்பாராத விதமாக டிரான்ஸ்பார்மர் மீது இவரது கால் பட்டதில், மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில், சம்பவ இடத்திலேயே அன்பழகன் பலியானார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பூந்தமல்லி போலீசார், அன்பழகன் உடலை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us