ADDED : ஜூன் 19, 2026 04:11 PM
அ நிறம் | அளவு
கஞ்சா ஆயில் விற்ற இருவர் சிக்கினர்
வானகரம்: வானகரம், அடையாளம்பட்டு மேம்பாலம் அருகே சர்வீஸ் சாலையில், ஆட்டோவில் வைத்து கஞ்சா ஆயில் விற்ற, பூந்தமல்லி சென்னீர்குப்பத்தைச் சேர்ந்த சூர்யா என்பவரை, நேற்று முன்தினம் இரவு, போலீசார் கைது செய்தனர். அவர் தந்த தகவலையடுத்து, மண்ணுார்பேட்டையைச் சேர்ந்த சஞ்சய், 20, என்பவரையும் கைது செய்தனர்.
இருவரிடமிருந்து மொத்தம் 3 கிராம் கஞ்சா ஆயில், 32 கிராம் கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.
