sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

டிரைவர் தாக்குதல் விவகாரம் சுங்கச்சாவடி ஊழியர்கள் கைது

/

டிரைவர் தாக்குதல் விவகாரம் சுங்கச்சாவடி ஊழியர்கள் கைது

டிரைவர் தாக்குதல் விவகாரம் சுங்கச்சாவடி ஊழியர்கள் கைது

டிரைவர் தாக்குதல் விவகாரம் சுங்கச்சாவடி ஊழியர்கள் கைது


ADDED : மார் 25, 2024 12:49 AM

Google News

ADDED : மார் 25, 2024 12:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:சென்னை அடுத்த சித்தாலப்பாக்கத்தைச் சேர்ந்தவர் முருகன், 38. இவர், நேற்று முன்தினம் இரவு தன் குடும்பத்துடன், 'டாடா' சரக்கு வாகனத்தில் செஞ்சிக்கு சென்று கொண்டிருந்தார்.

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பரனுார் சுங்கச்சாவடியில், கட்டணம் செலுத்துவது தொடர்பாக சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும், முருகனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில், சுங்கச்சாவடி ஊழியர்கள் முருகனை சரமாரியாக தாக்கினர்.

ஆத்திரமடைந்த முருகன் குடும்பத்தினர் மற்றும் ஆதரவாக வந்த வாகன ஓட்டிகள், சுங்கச்சாவடி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து விசாரித்த செங்கல்பட்டு தாலுகா போலீசார், சுங்கச்சாவடி ஊழியர்களான குமார், 36, முத்து, 38, ஆகியோரை, நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us