sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

காசிமேடில் 4வது வாரமாக பெரிய மீன்கள் வரத்து 'டல்' மீன் பிரியர்கள், வியாபாரிகள் ஏமாற்றம்

/

காசிமேடில் 4வது வாரமாக பெரிய மீன்கள் வரத்து 'டல்' மீன் பிரியர்கள், வியாபாரிகள் ஏமாற்றம்

காசிமேடில் 4வது வாரமாக பெரிய மீன்கள் வரத்து 'டல்' மீன் பிரியர்கள், வியாபாரிகள் ஏமாற்றம்

காசிமேடில் 4வது வாரமாக பெரிய மீன்கள் வரத்து 'டல்' மீன் பிரியர்கள், வியாபாரிகள் ஏமாற்றம்


ADDED : ஜூலை 08, 2024 01:17 AM

Google News

ADDED : ஜூலை 08, 2024 01:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காசிமேடு:காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து, 300க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனர். மீன்பிடி தடைக்காலம் முடிந்து, நான்காவது ஞாயிற்றுக்கிழமை என்பதால், நேற்று 100க்கும் மேற்பட்ட படகுகள் கரை திரும்பின.

சின்ன சங்கரா, தும்பிலி, நெத்திலி, மத்தி உள்ளிட்ட சிறிய மீன்களின் வரத்து அதிகம் இருந்தன. வஞ்சிரம், பாறை, கொடுவா, பர்லா உள்ளிட்ட பெரிய மீன்கள் வரத்து மிகக்குறைவாக உள்ளன.

நேற்று அதிகாலை 2:00 மணி முதல் காசிமேடில் மீன்களை வாங்க மக்கள் குவிந்தனர். சிறிய மீன்களின் வரத்து அதிகம் இருந்ததால், பொதுமக்கள் ஏமாற்றத்துடன் சென்றனர்.

சிறிய மீன்களை 100 ரூபாய்க்கு கூவி கூவி விற்றும், வாங்க ஆளில்லாத நிலையே இருந்தது. இதனால், மீன் வியாபாரிகள் பெரும் ஏமாற்றமடைந்தனர்.

இது குறித்து, விசைப்படகு உரிமையாளர் கூறியதாவது:

நான் 45 ஆண்டுகளாக மீன்பிடி தொழிலில் இருக்கிறேன். எந்த பருவத்தில் எந்தெந்த மீன்கள் கிடைக்கும் என, எளிதில் கணக்கிடுவோம்.

ஆனால், நடப்பாண்டு நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. ஒவ்வொரு ஆண்டும் மீன்பிடி தடைக்காலம் முடிந்து, பெரிய மீன்களின் வரத்தே அதிகம் இருக்கும். கடந்தாண்டு மீன்பிடி தடைக்காலம் முடிந்து, பெரிய வகை மீன்களை டன் கணக்கில் பிடித்தோம். இந்தாண்டு பெரிய மீன்கள் கடலில் கிடைக்கவில்லை.

சென்னை - ஆந்திரா கடற்கரை நிலவரத்தை கணிக்க முடியவில்லை. வரும் வாரங்களில் பெரிய மீன் வகைகள் கிடைக்குமா எனவும் தெரியவில்லை.

நேற்று, நெத்திலி மீன்கள் அதிகம் கிடைத்தன. 20 கிலோ கூடை நெத்திலி மீனை, 400 ரூபாய்க்கு விற்பனை செய்தேன். கடந்த மூன்று வாரங்களை விட, தற்போது மீன்கள் விலை மிகவும் சரிந்தது. படகுகளுக்கான எரிபொருள் செலவை கூட எடுக்க முடியாத நிலை தான் உள்ளது. கடந்த வாரங்களில் பெற்ற வருமானம் கூட நேற்று இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

நெத்திலி, சங்கரா தலா 100 ரூபாய்க்கு வாங்கினேன். 2 கிலோ சிறிய மீன்கள் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டன. மீன்பிடித் தடைக்காலத்தில் வரத்து போன்றே, சிறிய ரக மீன்கள் அதிகம் விற்பனைக்கு வந்தன. ஆனால், அவற்றை வாங்க பெரும்பாலானோர் ஆர்வம் காட்டவில்லை. பெரிய மீன்கள் வரும் என எதிர்பார்த்து ஏமாற்றமடைந்தோம்.

- முத்துச்செல்வி, தண்டையார்பேட்டை.

மீன் விலை நிலவரம்

வகை கிலோ (ரூ.)

வஞ்சிரம் 1,200 - 1,500

வவ்வால் 1,000 -- 1,300

கொடுவா 1,000 -- 1,500

சங்கரா 100 -- 500

கனாகத்த 150 -- 200

சீலா 300 - 400

நெத்திலி 100

மத்தி 100

வாளை 100

நவரை 100

கிளிச்ச 100

பாறை 500 -- 700

நண்டு 300 -- 600

இறால் 300 -- 500






      Dinamalar
      Follow us