/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தாசில்தாரை கண்டித்து ஆர்ப்பாட்டம்
/
தாசில்தாரை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 04, 2024 01:30 AM
அயனாவரம்:அயனாவரம், சக்கரவர்த்தி காலனியைச் சேர்ந்தவர் சந்தானலட்சுமி, 50. இவருக்கும், அருகில் வசிப்பவருக்கும் இடப் பிரச்னை இருந்துள்ளது.
இதனால், தன் வீட்டின் நிலத்தை அளப்பதற்காக, ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார்.
இதையடுத்து கடந்த ஜூலை 26ல், மேற்படி இடத்தை, அயனாவரம் தாலுகா நிள அளவையர் அளந்து கொடுத்துள்ளார்.
நில அளவில் ஒருதலைபட்சமாக இருப்பதாக கூறி, சந்தானலட்சுமி சார்பில், வி.சி., கட்சியின் 97வது வட்ட செயலர் அசோக் என்பவர், தாசில்தார் அலுவலத்தில் கடந்த மாதம் 20ம் தேதி முறையிட்டார்.
அப்போது, அசோக்கிற்கும், அங்கு பணியில் இருந்த தாசில்தார் ரமேஷுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக, தாசில்தார் தரப்பில் டி.பி.,சத்திரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அசோக் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
அதேபோல், தாசில்தார் அவதுாறாக ஒருமையில் பேசியதாகக் கூறி, அசோக் தரப்பிலும் புகார் அளிக்கப்பட்டதாகவும், ஆனால் தாசில்தார் மீது எந்த நடவடிக்கையும் போலீசார் எடுக்கவில்லை எனக் கூறி, நேற்று அயனாவரத்தில் வி.சி.,கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.