/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தண்ணீர் பந்தலுக்கு அனுமதி மறுப்பு அ.தி.மு.க.,வினர் சாலை மறியல்
/
தண்ணீர் பந்தலுக்கு அனுமதி மறுப்பு அ.தி.மு.க.,வினர் சாலை மறியல்
தண்ணீர் பந்தலுக்கு அனுமதி மறுப்பு அ.தி.மு.க.,வினர் சாலை மறியல்
தண்ணீர் பந்தலுக்கு அனுமதி மறுப்பு அ.தி.மு.க.,வினர் சாலை மறியல்
ADDED : ஏப் 28, 2024 01:13 AM

திருவொற்றியூர்:கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து, பொதுமக்களை காக்கும் வகையில், அ.தி.மு.க., சார்பில், கட்சியினர் ஆங்காங்கு குடிநீர் மற்றும் மோர் பந்தல்களை அமைக்க அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி அறிவித்தார்.
இதையடுத்து, தமிழகத்தின் பல்வேறு பகுதியில் அ.தி.மு.க.,வினர் நீர், மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர்.
கடந்த 25ம் தேதி, திருவொற்றியூரில் அ.தி.மு.க., சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ., குப்பன் ஏற்பாட்டில் திருவொற்றியூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டது.
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் மாதவரம் மூர்த்தி, வடசென்னை தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் ராயபுரம் மனோ ஆகியோர் நீர் மோர் பந்தலை திறந்து வைத்து, மோர், இளநீர், வெள்ளரிக்காய், இளநீர், தர்ப்பூசணி ஆகியவற்றை பொதுமக்களுக்கு வழங்கினர்.
சம்பவ இடத்திற்கு வந்த திருவொற்றியூர் உதவி பொறியாளர் மனோஜ்குமார் தலைமையிலான மாநகராட்சியினர், தேர்தல் விதிமுறைகள் அமலில் இருப்பதால், அ.தி.மு.க., கொடி, பந்தல், தண்ணீர்பந்தல் வைப்பதற்கு அனுமதி இல்லை என தெரிவித்தனர்.
அவர்களுடன் முன்னாள் எம்.எல்.ஏ., குப்பன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பந்தலை அப்புறப்படுத்துவதாக தெரிவித்ததையடுத்து, மாநகராட்சியினர் கலைந்து சென்றனர்.
ஆனால், அதன்படி அகற்றப்படாததால், மாநகராட்சி ஊழியர்கள் நேற்று மாலை வந்து தண்ணீர் பந்தலை அகற்றினர். அப்போது தண்ணீர் பந்தல் அருகே வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, பழனிசாமி ஆகியோர் பேனர்களை மாநகராட்சி ஊழியர்கள் கிழித்தனர்.
இதனால், ஆத்திரமடைந்த அ.தி.மு.க.,வினர், முன்னாள் எம்.எல்.ஏ., குப்பன் தலைமையில், 100க்கும் மேற்பட்டோர் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் கிழிக்கப்பட்ட பேனர்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போலீசார் பேச்சு நடத்தியதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

