sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மேலிட உத்தரவால் தி.மு.க., கவுன்சிலர்கள் 'அப்செட்'

/

மேலிட உத்தரவால் தி.மு.க., கவுன்சிலர்கள் 'அப்செட்'

மேலிட உத்தரவால் தி.மு.க., கவுன்சிலர்கள் 'அப்செட்'

மேலிட உத்தரவால் தி.மு.க., கவுன்சிலர்கள் 'அப்செட்'


ADDED : ஜூன் 28, 2024 12:15 AM

Google News

ADDED : ஜூன் 28, 2024 12:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி, ஆவடி மாநகராட்சியின் நான்கு மண்டலங்களில் 48 வார்டுகள் உள்ளன. இதில், 35 வார்டு கவுன்சிலர்கள், தி.மு.க.,வைச் சேர்ந்தோர்.

நேற்று காலை 10:30 மணிக்கு, மேயர் உதயகுமார் தலைமையில், மாநகராட்சியின் இரண்டாவது கூட்டம் துவங்கியது. இதில், மாநகராட்சி கமிஷனர் ஷேக் அப்துல் ரஹ்மான் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர். 78 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், கவுன்சிலர்கள் பேசியதாவது:

ஜான், மா.கம்யூ., 10வது வார்டு: தெருக்களில், 20 வாட் திறன் உடைய எல்.இ.டி., விளக்குகள் பொருத்தப்படுகின்றன. மின்கம்பங்கள் இடையே இடைவெளி அதிகமாக உள்ளதால், வெளிச்சம் போதவில்லை. எனவே, 40 அல்லது 60 வாட் எல்.இ.டி., விளக்குகள் அமைக்க வேண்டும்.

கார்த்திக் ரமேஷ், ம.தி.மு.க., 48வது வார்டு: ஆவடி, பருத்திப்பட்டில் உள்ள 1.40 ஏக்கர் ஓ.எஸ்.ஆர்., நிலத்தில், பூங்கா அமைக்கப்பட உள்ளது. வெறும் பூங்காவாக இல்லாமல் உள்விளையாட்டு அரங்கம் அமைக்க வேண்டும்.

ஆறுமுகம், அ.தி.மு.க., 25வது வார்டு: குடிநீர் மற்றும் பாதாள சாக்கடைக்கு, ஏற்கனவே பலர் 'டிபாசிட்' தொகை கட்டியுள்ளனர்.

ஆனால், மீண்டும் டிபாசிட் தொகை கட்ட மாநகராட்சியில் 'டிமாண்ட் நோட்டீஸ்' அனுப்பப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.

இவ்வாறு விவாதங்கள் நடந்தன.

39 நிமிடங்களில் முடிந்த ஆவடி மாநகராட்சி கூட்டம்

ஆவடி மாநகராட்சி கூட்டத்தில் 35 தி.மு.க., கவுன்சிலர்கள், வாய்மூடி மவுனியாகவே இருந்தனர். கூட்டம் முடியும் வரையும், தீர்மானம், வார்டு குறைகள் குறித்து ஒரு வார்த்தைகூட பேசக்கூடாது என, முன்னாள் அமைச்சருக்கு நெருக்கமான ஒரு மண்டல குழு தலைவர் விடுத்த வாய்மொழி உத்தரவால், ஒருவரும் வாய்திறக்கவில்லை. இதனால், மக்களின் அடிப்படை வசதிகளை சுட்டிக்காட்ட வந்த கவுன்சிலர்கள், அதிருப்தி அடைந்தனர்.அ.தி.மு.க.,வினர் கூறியதாவது:முன்னாள் அமைச்சர் நாசருக்கு, மீண்டும் அமைச்சர் பதவி கிடைக்க உள்ளது. சட்டசபை நடக்கும் இந்த நேரத்தில், மாநகராட்சி பகுதிகளில் நிலவும் குறைகள் குறித்து, மாமன்ற கூட்டத்தில் தி.மு.க., கவுன்சிலர்கள் எதையாவது உளறி வைத்தால், அரசுக்கு அவப்பெயர் ஏற்படும். அது, நாசர் தரப்புக்கு தலைவலியை உண்டாக்கும். அதனால், தி.மு.க., கவுன்சிலர்கள் யாரும் வாயை திறக்கவில்லை. இதன் காரணமாக 39 நிமிடங்களில் கூட்டம் முடிந்தது.இவ்வாறு அவர்கள் கூறினர்.








      Dinamalar
      Follow us