sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

துர்க்கை அம்மன் கோவில் வழக்கு மாற்று திட்டத்தால் முடித்து வைப்பு

/

துர்க்கை அம்மன் கோவில் வழக்கு மாற்று திட்டத்தால் முடித்து வைப்பு

துர்க்கை அம்மன் கோவில் வழக்கு மாற்று திட்டத்தால் முடித்து வைப்பு

துர்க்கை அம்மன் கோவில் வழக்கு மாற்று திட்டத்தால் முடித்து வைப்பு


ADDED : ஆக 09, 2024 12:19 AM

Google News

ADDED : ஆக 09, 2024 12:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, சென்னை மெட்ரோ திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிக்காக, ராயப்பேட்டை ஒயிட்ஸ் சாலையிலுள்ள ரத்தின விநாயகர் மற்றும் துர்க்கை அம்மன் கோவிலின் ராஜ கோபுரத்தை இடிக்கும் வகையிலான திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி கே.குமரேஷ்பாபு அடங்கிய, 'முதல் பெஞ்ச்', கோவிலை பார்வையிட ஒரு குழுவை அமைத்து, கடந்த வாரம் உத்தரவிட்டது.

இதன்படி, கடந்த 3ம் தேதி, நீதிபதி குமரேஷ் பாபு தலைமையிலான குழு கோவிலை பார்வையிட்டது. இந்நிலையில் இவ்வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி கே.குமரேஷ்பாபு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், மாற்று திட்டம் குறித்த விபரத்தை தாக்கல் செய்தார்.

அதில், துர்க்கை அம்மன் கோவில் நுழைவு கோபுரத்தை, 5 மீட்டர் கோவில் உள்புறம் தள்ளி வைத்து, மெட்ரோ பணி முடிந்ததும், பழைய இடத்தில் நிறுவப்படும்.

பக்தர்கள் கோவிலுக்கு வர வசதியாக, மாற்று பாதை அமைத்து தரப்படும்.

ரத்தன விநாயகர் கோவில் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு, மெட்ரோ பணி முடிந்ததும், அறநிலையத்துறையால் கண்டறியப்பட்ட இடத்தில், மெட்ரோ நிர்வாகம் கோவிலை கட்டித் தரும்.

மெட்ரோ ரயில் நிலைய நுழைவு, வெளியேறும் பாதை, யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவன வளாகத்திற்கு மாற்றப்படுகிறது என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.ரவி, வழக்கறிஞர் எம்.ராமமூர்த்தி ஆகியோர் ஆஜராகி,'மெட்ரோ ரயில் நிர்வாகம் கையகப்படுத்தி இருக்கும் கோவிலின் கிழக்கு பகுதியில் உள்ள இடத்தை, பக்தர்களின் வாகன 'பார்க்கிங்'காக மாற்றித்தர வேண்டும்' என்றனர்.

மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் தாக்கல் செய்த மாற்று திட்டத்தை ஏற்ற முதல் பெஞ்ச், வாகன பார்க்கிங் விவகாரம் தொடர்பாக, மனுதாரர் தரப்பு சம்பந்தப்பட்ட துறையிடம் கோரிக்கை மனு அளித்து நிவாரணம் பெறலாம் என அறிவுறுத்தி, இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டது.






      Dinamalar
      Follow us