ADDED : பிப் 25, 2025 02:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர், திருவள்ளூர் மாவட்டம் பூனிமாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சாய்கணேஷ், 49. இவர், 'ஹூண்டாய்' காரில், நேற்று முன்தினம், திருத்தணி நோக்கி சென்று கொண்டிருந்தார்.
பாண்டூர், இந்தியன் ஆயில் பெட்ரோல் 'பங்க்' அருகே வந்தபோது, எதிரே சித்துாரில் இருந்து, திருவள்ளூர் நோக்கி வந்த, 'மாருதி பொலினோ' கார் நிலை தடுமாறி, 'ஹூண்டாய்' கார் மீது மோதியது.
இதில், 'மாருதி பொலினோ' காரில் வந்த, பூந்தமல்லி அடுத்த குமணன்சாவடி பகுதியைச் சேர்ந்த கோபிகிருஷ்ணன், 45, தேவராஜன், 78, சுப்புலட்சுமி, 42, ஸ்ரீஜோதி, 51, ஆகியோர் படுகாயமடைந்தனர்; சாய்கணேஷ் லேசான காயமடைந்தார்.
திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த, தேவராஜன் உயிரிழந்தார். மற்றவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

