ADDED : மார் 09, 2025 01:18 AM
குன்றத்துார்,குன்றத்துார் அருகே கலெடிபேட்டை பகுதியை சேர்ந்தவர் பூசம்மாள், 75, இவர், நேற்று குன்றத்துார்- -ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில் நடந்து சென்றார்.
அப்போது அந்த வழியே வேகமாக வந்த லாரி பூசம்மாள் மீது மோதியது. இதில், பூசம்மாள் சம்பவ இடத்திலேயே பலியானார்.
அப்போது, அதே வழியில் சென்ற மற்றொரு லாரி, விபத்து ஏற்படுத்திய லாரியின் பின்னால் மோதியது. இதில், லாரியின் முன்பக்கம் சேதமாகி ஓட்டுனர் இளவரசு, 38, இடிபாட்டில் சிக்கிக்கொண்டார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் மூதாட்டி உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
லாரி இடிபாடுகளில் சிக்கிய ஓட்டுனரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
***