ADDED : ஜூன் 30, 2024 12:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, சென்னையில், மாஞ்சா நுால் தயாரிக்கவும், விற்கவும், ஏற்கனவே அமலில் இருந்த தடை, இரண்டு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை மற்றும் புறநகர் பகுதியில், மாஞ்சா நுால் பயன்படுத்தி காற்றாடிகள் விட ஏற்கனவே தடை அமலில் உள்ளது. வரும், ஆக, 27ம் தேதி வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மாஞ்சா நுால் பயன்படுத்தி பட்டம் விடுவோர், தயாரித்து விற்பனை செய்வோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

