/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கத்தியை காட்டி மிரட்டி ரூ.13.5 லட்சம் பறிப்பு
/
கத்தியை காட்டி மிரட்டி ரூ.13.5 லட்சம் பறிப்பு
ADDED : ஜூன் 07, 2024 12:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எஸ்பிளனேடு, வியாசர்பாடி, எருக்கஞ்சேரி, வடிவுடையம்மன் தெருவைச் சேர்ந்த நண்பர்கள் சுலைமான், 57; முகமது ஆரிப், 57. இருவரும் பெரியமேட்டில் தோல் பொருள் நிறுவனம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சுலைமான் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு பொருட்கள் வாங்குவதற்காக, நேற்று முன்தினம் இரவு 13.5 லட்சம் ரூபாயுடன், டூ - வீலரில் இருவரும் சென்றனர்.
கோட்டை ரயில் நிலையம் அருகே, இரண்டு டூ - வீலர்களில் பின்தொடர்ந்து வந்த நான்கு பேர், சுலைமான் மற்றும் முகமது ஆரிபை கத்தி முனையில் மிரட்டி, 13.5 லட்சம் ரூபாயை பறித்து தப்பினர். வியாபாரிகள் இருவரும் அளித்த புகாரின்படி, எஸ்பிளனேடு போலீசார் விசாரிக்கின்றனர்.